ஜோதிட சாஸ்திரம் விண்வெளியில் ஒளிர்விடும் நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை, பண்டைய காலத்திலிருந்தே, மனிதனை ஈர்த்து வந்துள்ளன. அவனுடைய ஆவலையும் தூண்டி வந்துள்ளன. இவற்றைப் பலகாலம் கண்டு மகிழ்ந்த அவன், பின்னர், இவற்றின் அமைப்பு, இயக்கம் போன்றவற்றை கவனிக்கத் தொடங்கினான். தவறாமல், தொடர்ந்து இவற்றைக் கூர்ந்து நோக்கி வந்த அவன், பின்னர், இவற்றுடன், மண்ணுலகில் மனிதன் வாழும் வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கத் தொடங்கினான். பல்லாண்டு காலம் தொடர்ந்த இந்த விடா முயற்சியின் பயனாக, இது போன்ற விண்வெளி வாசிகள், மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதைக் கண்டு கொண்டான். இது போன்ற நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவற்றின் அமைப்பு, இயக்கம் ஆகியவை குறித்து முழுமையாகக் கற்று, அறிந்து கொள்வதன் முலம், மனிதர்களின் வாழ்க்கை, எதிர்காலம் ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்பதையும் அறிந்து கொண்டான். பல்லாண்டுகால, இந்த அநுபவ அறிவின் விளைவாக உருவானது தான் ஜோதிடம் எனப்படும் பண்டைய விஞ்ஞானம் அல்லது சாஸ்திரம் ஆகும். ஜாதகம் கடல் போல் விரிந்து, பரந்துள்ள இந்த ஜோதிடக் கலை, குறிப்பாக, நட்சத்திரம், கிரகம் ஆ...
சந்திரன் : சந்திரன் நவகிரகங்களுள் இரண்டாம் இடத்தை வகிக்கும் கிரகம் ஆகும் . நவ கிரகங்களில் சூரியன் தந்தை என்றால் சந்திரன் தாய் ஆகும் . தந்தையின் கோபத்தைத் தனித்து ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளை அவர் கோபத்தில் இருந்து காக்கிறாளோ அது போல சூரியனின் வெப்பத்தை ஈர்த்து அதனைக் குளுமையாக்கி நமக்கு அளிப்பது சந்திரன் ஆகும் . எனவே தான் சந்திரனை தாய் என்று கூறுகிறோம் . திங்கள் மதி , சோமன் , என சந்திரனுக்கு வேறு பெயர்கள் உண்டு . பிறையும் சந்திரனும் : சந்திரனுக்கு வளர்பிறை , தேய்பிறை என இரண்டு காலங்கள் உண்டு . அதற்குப் பின்னணியில் ஒரு புராதன கதையும் உண்டு என்பதை நம்மில் பலரும் அறிவோம் . ஒரு முறை தட்சன் தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான் . தனது 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதற்குப் பதிலாக ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் காட்டினான் சந்திரன் . இதனால் மனமுடைந்த மற்ற 26 மனைவிகளும் தந்தை தட்சனிடம் முறையிட்டனர் . தட்சன் சந்திரனிடம் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டினார் . சந்திரன் அதை ஏற்கவில்லை . இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் அழக...